For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவமனையில் ஜெ.வை நான் சந்தித்தபோது... விவரிக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை தாம் ஒருமுறை சந்தித்ததாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது தாம் அவரை ஒருமுறை சந்தித்ததாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக http://www.dailyo.in இணையதளத்தில் ஆளுநர் வித்யாசாகர் எழுதியுள்ள கட்டுரையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்க்க சில முறை சென்றேன். அப்படி சென்றபோது ஒருமுறை மட்டும் என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி தாம் குணமடைந்து வருவதை உணர்த்தினார் என குறிப்பிட்டுள்ளார்.

Jayalalithaa raised her thumb in Apollo Hopistal, says Vidayasagar Rao

இந்த கட்டுரையில் தம்முடைய இளம்பிராயம், குடும்ப உறுப்பினர்கள், எமர்ஜென்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது உள்ளிட்டவற்றையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விவரித்திருக்கிறார். 1980களில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வாக தமது அண்ணனும் பாஜக எம்.எல்.ஏ.வாக தாமும் சட்டசபையில் மோதிக் கொண்ட சுவாரசிய சம்பவங்களையும் இந்த கட்டுரையில் வித்யாசாகர் பதிவு செய்துள்ளார்.

Jayalalithaa raised her thumb in Apollo Hopistal, says Vidayasagar Rao

மகாராஷ்டிரா ஆளுநராக மும்பை ராஜ்பவன் அனுபவங்கள், அம்மாநில பழங்குடியினர் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தது ஆகியவற்றையும் வித்யாசாகர் ராவ் இதில் பதிவு செய்துள்ளார்.

English summary
TamilNadu Governor Vidyasagar raod wrote an article in dailyo portal. He said that "I had the opportunity to visit an ailing J Jayalalithaa at Chennai’s Apollo Hospital on a few occasions. During one of such meeting, she had even raised her thumb signalling that she was on way to recovery".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X