சசி துரத்திவிட்ட ஜெ. ஆஸ்தான ஜோதிடர்கள் தீபா முகாமில்!
சசிகலா துரத்திவிட்ட ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் தீபா முகாமில் இணைந்துவிட்டனராம்.
சென்னை: சசிகலாவால் விரட்டியடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் தற்போது தீபாவின் வீட்டிலேயே இருக்கின்றனராம். இதனால் தீபா குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாம்.
ஜெயலலிதா ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவருக்கு ஆலோசனை வழங்க 4 ஆஸ்தான ஜோதிடர்களை வைத்திருந்தார்.

துரத்திவிட்ட சசி
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை போயஸ் கார்டனில் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருந்தனர் இந்த ஜோதிடர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஜோதிடர்களை சசிகலா போயஸ் கார்டன் பக்கம் எட்டிப் பார்க்க கூடாது என துரத்திவிட்டனராம்.

புதிய ஜோதிடர்கள் புலம்பல்
தற்போது சசிகலா தமக்கான ஆஸ்தான ஜோதிடர்களாக சிலரை வைத்துக் கொண்டுள்ளார். தற்போது சசிகலா சிறைக்குப் போய்விட்டதால் 'வரும்படி' போச்சே என வருத்தத்தில் இருக்கிறார்கள் புதிய ஜோதிடர்கள்.

தீபாவிடம் சரண்
இதனிடையே சசிகலா விரட்டிவிட்ட ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் தீபா முகாமுக்குள் நுழைந்துவிட்டனராம். தீபாவும் இப்போது ஜாதகத்தில் தீவிர நம்பிக்கையோடு இருந்து வருகிறாராம்.

குடும்பத்தில் புகைச்சல்
தீபாவின் இந்த திடீர் மாற்றத்தை அவரது கணவரால் சசிக்க முடியவில்லையாம். இதனால் தீபா குடும்பத்தில் புகைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications