முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: பொன்னையன்
மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் என அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பிசியோதெரபி நிபுணர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்து இன்றுடன் 41 நாட்கள் ஆகிறது. முதல்வர் நலம் பெற வேண்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார். முதல்வருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களின் பிரார்த்தனைகளால் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் எனவும் கூறினார் பொன்னையன்.












Click it and Unblock the Notifications