அமைச்சர் வீரமணியின் துணைவியார் உடல் நலக்குறைவால் காலமானார்
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் வீரமணியின் துணைவியால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
வேலூர்: தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் துணைவியார் உடல்நலக்குறைவால் புதன்கிழமை மாலை காலமானார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் கே.சி.வீரமணி. கடந்த 2006 முதல் வேலூர் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளராகவும் உள்ளார். கடந்த 1993 ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக உள்ள இவர், ஜோலார்பேட்டை கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். பி.ஏ. வரை படித்துள்ள இவர், பீடி தொழிற்சாலையையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வீரமணியின் துணைவி பத்மாசினி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், புதன்கிழமை மாலை காலமானார். பத்மாவுக்கு ஒரு மகள் உள்ளார். வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் ஜோலார்பேட்டையில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.