இன்னும் ஏன் ஆளுநரை நியமிப்பதில் இவ்வளவு தாமதம்.. கி.வீரமணி
தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதில் உள்நோக்கம் உள்ளதோ என்று சந்தேகப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது என்று தி.க. தலைவர். கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று, கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்காமல் தள்ளிக் கொண்டே, பொறுப்பு ஆளுநரை அதுவும் மகராஷ்டிரத்தின் ஆளுநரை, நியமனம் செய்ததால், ஆளுநர் பணியை குடியரசு நாளில்கூட அவர் செய்யவேண்டியதை - மற்றவர், முதல்வர் செய்தார் என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டு.

அதுபோலவே ஜனநாயகம் தமிழ்நாட்டில் எங்கே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு விடுமோ என்ற கவலை பல முற்போக்கு ஜனநாயகவாதிகளிடம் இருப்பதற்குக் காரணம் - உடனடியாக தமிழ்நாட்டிற்கு நிரந்தர ஆளுநரை மேலும் காலந்தாழ்த்தாமல் நியமிக்கவேண்டும்.
அந்த நியமனம் என்ன அவ்வளவு கடினமான ஒன்றா? மத்திய அரசுக்கு, பலருக்கும் புரியவில்லை! அரசியல், இதிலும் உள்ளதோ என்று பலரும் அய்யுறும் அவலம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications