கருத்து கேட்டதற்கே கைது.. இது சர்வாதிகாரம்.. யோகேந்திர யாதவுக்காக கொந்தளிக்கும் கமல்ஹாசன்
Recommended Video

திருவண்ணாமலை: சென்னை-சேலம் நடுவே அமைக்கப்பட உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க யோகேந்திர யாதவ் இன்று சென்றார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
யோகேந்திர யாதவை சந்திக்க காத்திருந்த விவசாயிகளையும் கூட போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட யோகேந்திர யாதவ், மாலையில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது விவசாயிகளை சந்திக்க அவர் முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், கமல்ஹாசன் ட்விட்டரில் வீடியோ மூலம் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கச் சென்ற நண்பர் திரு @_YogendraYadav கைது செய்யப்பட்டது விமர்சனத்துக்குரியது, கடும் கண்டனத்துக்குரியது. pic.twitter.com/JmwJz7HIQo
— Kamal Haasan (@ikamalhaasan) September 8, 2018
கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: வெளிமாநிலத்தில் இருந்து நமது விவசாயிகளிடம் கருத்து கேட்க வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இது கண்டனத்திற்கு உரியது.
கருத்து கேட்டதற்கு கூட கைது செய்யும் இந்த அதிகாரம் எப்படி இவர்களுக்கு வந்தது. சட்டத்தை ஒரு உதாரணமாக சொல்லி, குரல்களே எழாமல் செய்யும் வேலை சர்வாதிகாரம் என்றே தோன்றுகிறது.
இது ஜனநாயக நாடுதான் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் வழியாகத்தான் சர்வாதிகாரிகள் உலகெங்கும் ஆட்சியை பிடித்துள்ளனர் என்பதை நினைவு கொள்ளவும். மக்கள் கருத்துக்களை தெளிவாக பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும். அப்படி வராவிட்டால், வர வைக்க வேண்டும். நண்பர், சகோதரர் யோகேந்திர யாதவ் கைது கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications