கமல் எனக்கு எதிரி இல்லை.. நான் எதிர்க்கப்போவதும் இல்லை.. - ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை : கமல் தனக்கு எதிரி இல்லை என்றும், அவரை தான் எதிர்க்கப்போவது இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பலர் பேசிப் பேசியே அரசியல் செய்துவிட்டார்கள் அது போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு தமிழக மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆலைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் அதை எதிர்ப்பேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, கமல் தனக்கு எதிரி இல்லை என்றும், தான் கமலை எதிர்க்கப்போவது இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் மீனவர்கள் பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை ஆகியவையே தன்னுடைய எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிறைய பேசுவதால் எதிரிகள் தான் அதிகமாவார்கள் என்றும், இதுவரை தமிழகத்தில் நிறைய பேசி பேசி அரசியல் செய்துவிட்டார்கள். இனி அது மாற வேண்டும் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications