காவிரியில் தமிழகத்துக்கான குரல்... கமல் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் கமல்ஹாசன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
சென்னை: காவிரியின் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது தமிழகத்துக்கு சாதகமாக இல்லை என்பதால் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு எதிராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசனும் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருந்தார்.
அதன்படி சென்னையில் தி.நகரில் அதற்கான கூட்டம் கமல் தலைமையில் கூடியுள்ளது. இதில் காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தை நான் நடத்தவில்லை என்றும் இது விவசாயிகளுக்கான கூட்டம் என்றும் கமல் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில் அய்யாக்கண்ணு, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications