For Daily Alerts
Just In
எனது பெயரில் வெளியிடப்படும் கற்பனை கூற்றுகளை நிறுத்துக: கமல் கடும் கண்டனம்
தமது பெயரில் வெளியிடப்படும் கற்பனை அறிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமது பெயரில் இணையதளம் ஒன்றில் (ஒன் இந்தியா தமிழ் அல்ல) வெளியிடப்படும் கற்பனை கூற்றுகளை உடனே நிறுத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
என் பெயரால் எழுப்பப்பபடும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல.
போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது.
இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Comments
English summary
Kamalhaasan has denied and condemned that the Portal (Not Oneindia Tamil) which carried the false statements in his name.
Story first published: Wednesday, March 1, 2017, 18:01 [IST]