சென்னையில் மார்ச் 8ல் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டம்!
Recommended Video

சென்னை : சென்னையில் மார்ச் 8ம் தேதி கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ல் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் நியமனம், பேச்சாளர்கள் நியமனம் என்று கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். இதன் அடுத்தகட்டமாக மகளிரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய கமல் முதன்முறையாக சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தின பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் சிறப்புவிருந்தினர்களாக அழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications