மது பழக்கத்தினால் இளைஞர்கள் வேலைக்கு போவது குறைந்துள்ளது - கனிமொழி குற்றச்சாட்டு
நெல்லை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் ‘பூரண மதுவிலக்கு' என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்கு தான் என கிட்டதட்ட எல்லா கட்சிகளும் கூறிவரும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் பூரண மதுவிலக்கை தங்களது தேர்தல் பிரசாரத்தில் முதன்மையாக கொண்டுள்ளன. இந்த நிலையில் ‘பூரண மதுவிலக்கு பெண்கள் சந்திப்பு'என்ற உரையாடல் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
இதில் மதுவினால் நேரடியாக, மறைமுகமாக பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்கள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், மாணவிகளுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உரையாடினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பாகதான் இருக்கும் என உறுதியளித்தார்.
மதுவால் சீரழிந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடிப்பதற்காகவே கொள்ளையடிக்கும் அவலநிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குடிப்பதற்காகவே கொள்ளையடிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நெல்லையில் நடைபெற்ற விழாவில் குற்றம் சாட்டினார்.
மேலும், மது பழக்கத்தினால் இளைஞர்கள் வேலைக்கு போவது குறைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று கனிமொழி கூறினார்.












Click it and Unblock the Notifications