வைகோ போட்டியிடாததுதான் மக்கள் நல கூட்டணி கூறிய மாற்றம்: கனிமொழி கேலி
சென்னை: தேர்தலில் போட்டியிடாமல் வைகோ விலகியதுதான் மக்கள் நல கூட்டணி கொண்டுவந்த மாற்றம்போல என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று வைகோ நேற்று திடீரென அறிவிப்பு வெளியிட்டது குறித்தும், திமுக ஜாதி கலவரத்தை தூண்டுவதால்தான் போட்டியிடவில்லை என வைகோ விளக்கம் கொடுத்தது பற்றியும், நிருபர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து கனிமொழி கூறியதாவது: வைகோ போட்டியிடாது குறித்து, அவரது கூட்டணி கட்சி தலைவர்கள்தான் கருத்து கூற வேண்டும். அதுகுறித்து திமுக கருத்து கூற முடியாது. ஆனால், வைகோ போட்டியிடாததுதான் மக்கள் நல கூட்டணி கூறிய மாற்றம் போலும்.
அதேநேரம், திமுக எப்போதுமே தேர்தலை நேர்மையாகத்தான் சந்தித்து வந்துள்ளது. ஜாதி கலவரத்தை தூண்டி திமுக தேர்தலை சந்தித்தது கிடையாது. போட்டியிடாமல் இருப்பதற்கு, வைகோவுக்கு இது ஒரு சாக்கு. எனவேதான், திமுக மீது பழியை சுமத்திவிட்டு வெளியேறியுள்ளார். இவ்வாறு கனிமொழி கூறினார்.












Click it and Unblock the Notifications