For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் கன்னட மக்கள் பத்திரமாக உள்ளனர் ... அதிமுகவின் சி. ஆர். சரஸ்வதி தகவல் #kannadigas

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரில் தமிழர்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் தமிழர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கன்னட மக்கள் பத்திரமாகவும், பிரச்சினையின்றியும் இருப்பதாக அதிமுகவைச் சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி இன்று பெங்களூரில் வெறியாட்டம் போட்டு விட்டது பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன, லாரிகள், கார்கள், பைக்குகள் என எதையும் அவர்கள் விடவில்லை. கடைகளையும் அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கன்னட மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒரு பிரச்சினையும் இங்கு இல்லை என்று கூறியுள்ளார்.

English summary
ADMK spokesperson C R Saraswathi has said that All Kannada people in Tamil Nadu are living safely; there's no issue at all, she added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X