சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க உறுதி ஏற்போம்.. காரைக்குடி கருத்ததரங்கில் முழக்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சீமை கருவேல மரம் ஒழிப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

காரைக்குடி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். சண்முகக்கனி தலைமையேற்றார். காரைக்குடி வட்டாட்சியர் எம். கண்ணன் மற்றும் காரைக்குடி நகராட்சி ஆணையாளர் பி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திர மோகன் மற்றும் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி பேரரசிரியர் பாகை கண்ணதாசன் சிறப்புரை ஆற்றினார்கள்.

அவர்கள் தனது உரையில், சீமை கருவேல மரங்கள் நீர் வளத்தை உறிஞ்சி, நம் வாழ்வாதாரத்தை ஒழிக்கக் கூடியது என்றும், ஒரு கருவேலக்கட்டை எரிவதால் ஏற்படும் புகை, பதினாறு சிகரட் பிடித்தலுக்கு சமம் என்றும், அதனால் புற்றுநோய் ஏற்ப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

நீதிபதி தனது தலைமை உரையில், மாணவர்கள் அனைவரும் கருவேல மரங்களை ஒழிக்க உறுதி மொழியேற்க வேண்டும் என்றார். அதிக கருவேலமரங்களை அழிக்கும் மாணவர்களுக்கு அகரம் அரிமா சங்கத்தின் சார்பாக பரிசு வழங்கப்படும் என்று வட்ட்டரத் தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார்.
விழாவின் இறுதியில் தேசிய அறிவியல் தினத்தை நினைவு கூறும் வகையில் மாணவர்களுக்கு, அறிவியல் அறிஞர் சர்.சிவி. ராமன் பற்றியும், அவரின் சிறந்த கண்டுபிடிப்பான இராமன் விளைவு பற்றியும் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திர மோகன், மாணவர்களுக்கு விளக்கினார்.

பள்ளியில், அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் மாணவர்கள் செல்வன். ஹரிஷ்மாறன், செல்வன். ஆரோக்கிய கிறிஸ்டோபர், செல்வி. சபானா ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் ஆர்.எம். அருண் சுவாமிநாதன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications