காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 6400 கன அடி நீர் திறப்பு.. நாளை தமிழகம் வந்தடையும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரியில் 6,400 கன அடிநீரை திறந்துள்ளது கர்நாடகா. காவிரி நீர் நாளை தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என பெங்களூர்-மைசூர் சாலையில் 2வது நாளாக இன்றும் கர்நாடக மாநில விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஹாசன் நகரில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த அம்மாநில முதல்வர் சித்தராமையா, "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதற்காக தண்ணீர் திறக்கவில்லை.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தண்ணீரை திறக்கிறோம். அதுவும் கொஞ்சம், கொஞ்சம் அளவுக்குதான் தண்ணீர் திறக்கிறோம். நமது விவசாயிகளுக்கு பிரச்சினை வரும் அளவுக்கு தண்ணீர் திறப்பு இருக்காது. தண்ணீர் திறக்காவிட்டால் தமிழகம், சுப்ரீம்கோர்ட் படியேறும் என்பதால்தான் இந்த நடவடிக்கை" என்றார்.












Click it and Unblock the Notifications