அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் சாப்பிட்டேன்.. பேஷ் பேஷ்... சொல்வது கர்நாடக அமைச்சர்!
சென்னை: அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் சாப்பிட்டேன், ரொம்ப டேஸ்ட்டாகவும், போதுமான அளவும் இருந்தது என பாராட்டியுள்ளார் கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதில் மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார்.
முந்தைய கால காங்கிரஸ் அரசுகளிலும் சிவகுமார் அமைச்சராக பதவி வகித்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பதால் அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் புள்ளி அவர்.

தொழிலதிபர்
பெங்களூர் அடுத்த கனகபுரா பகுதியை சேர்ந்த சிவகுமார் பெரும் தொழிலதிபரும் ஆவார். கிரானைட் தொழில், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

அதிரடி பாணி
தமிழகத்தை போலன்றி, கர்நாடகாவில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் படாடோபம் இன்றியே அரசியல் நடத்துபவர்கள். இதற்கு காரணம், இங்கு தேசிய அரசியல் கோலோச்சி இருப்பது. ஆனால் சிவகுமார் மட்டும் தமிழக அரசியல் தலைவர்கள் பாணியில் அரசியல் நடத்துபவர்.

சோனியா செல்லப்பிள்ளை
சித்தராமையா தலைமையில் அரசு அமைந்ததும், சிவகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்க அவர் மறுத்துவிட்டார். ஊழல் புகார் இருப்பதால் அமைச்சர் பதவி தர முடியாது என சித்தராமையா பிடிவாதம் காட்டினார். ஆனால் சோனியாவை டெல்லியில் சிவகுமார் சந்தித்து பேசிய சில நாட்களிலேயே அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் முதல்வரான, சித்தராமையா.

அம்மா உணவகத்தில் சாப்பாடு
இப்படியெல்லாம், செல்வாக்கும், படாடோபமும் கொண்ட சிவகுமார், சென்னை அருகே அம்மா உணவகத்தில் வந்து 5 ரூபாய்க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

போரூரில் பொங்கல்
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட ராஜிவ்காந்தி ஜோதி யாத்திரை பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவிடத்திற்கு சென்றது. அப்போது அதனுடன் வந்த சிவகுமார், போரூரிலுள்ள அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

சுவை, திடம்
சாப்பிட்ட பிறகு அதுகுறித்து சோஷியல் மீடியாவில் கருத்தும் கூறியுள்ளார் சிவகுமார். அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 5 ரூபாய் பொங்கல், சுவையானதாகவும், போதிய அளவுக்கு இருந்ததாகவும் புகழாரம் சூட்டி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சிவகுமார்.

ஜெயலலிதா ஆதரவாளர்
சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்த பிறகு, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாமா என யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது, மேல்முறையீடு செய்ய கூடாது என பகிரங்கமாகவே கூறியவர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications