காங்கிரஸ் பேரியக்கத்தின் செ.கு.உ ஆனார் கார்த்தி சிதம்பரம்.....!

எல்லோருக்கும் ஒரு வழி என்றால் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தனீனீனீனீ.. வழி.. அக்கட்சியின் தமிழ் மாநில பிரிவுக்கு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 8ம் தேதி தான் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில், 43 செயற்குழு உறுப்பினர்கள், 17 துணைத் தலைவர்கள், 29 பொதுச் செயலாளர்கள், ஒரே ஒரு பொருளாளர் மற்றும் 54 மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
கார்த்தி அப்பச்சி பெயரைக் காணோமே...
இதில் கார்த்தி சிதம்பரம் பெயரைக் காணவில்லையே என்று அவரது ஆதரவாளர்கள் குமுறினர், போர்க்கொடி உயர்த்தினர், டெல்லி வரை படையெடுத்தனர்.
மேலும், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடந்த, புதிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திலும் இந்த பிரச்சினை வெடித்தது. பலர் வெளிநடப்பு செய்தனர். ஒரே ரகளையாக காணப்பட்டது.
இதையடுத்து தற்போது மேலும் பல நிர்வாகிகள் பெயரை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அதில், 5 பேர் மாநில துணைத்தலைவர்களாகவும், 5 பேர் பொதுச் செயலாளர்களாகவும், செயற்குழு உறுப்பினர்களாக 18 பேரும் என 28 பேர் கொண்ட நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
இதில் கார்த்தி சிதம்பரம் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரை செயற்குழு உறுப்பினராக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் கார்த்தி சிதம்பரத்தை வெ்றும் பெயர் சொல்லிக் கூப்பிடாமல் இனிமேல் காங்கிரஸ் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்று ஆதரவாளர்கள் சொல்வார்கள் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications