தீபங்கள் ஏற்றி கார்த்திகைத் திருவிழாவைக் கொண்டாடிய காரைக்குடி பள்ளி மாணவ, மாணவியர்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு 25.11.2015 அன்று கார்த்திகைத் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு ரங்கோலிப் போட்டி நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக இராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சித்ரா மற்றும் சகாய அற்புதமேரி கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அழகாக ரங்கோலி கோலமிட்டு தீபங்கள் ஏற்றி இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். இப்போட்டியில் சுவாதி குழுவினர் முதலிடமும், கீர்த்திகா குழுவினர் இரண்டாமிடமும், முத்துமாரி குழுவினர் மூன்றமிடமும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.











Click it and Unblock the Notifications