கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அரசு அனுமதிக்கவில்லை.. துரைமுருகன் பரபரப்பு பேட்டி
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று திமுக துரைமுருகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று திமுக துரைமுருகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் இன்று மாலை 6.10 மணி இயற்கை எய்தியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அண்ணா சமாதிக்கு பின்புறம் அவர் உடல் அடக்கம் செய்யப்பட கோரிக்கை வைக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று திமுக துரைமுருகன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு இடம்தர தமிழக அரசு உறுதி தரவில்லை.முதல்வரை சந்தித்து அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க கேட்டோம். திமுக சார்பில் கடிதம் தந்த பிறகும் அரசு இன்னும் பதில் தரவில்லை. என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications