திருச்சி மாநாட்டுக்கு ரயிலில் அல்ல சாலை வழியாக செல்கிறார் கருணாநிதி
சென்னை: திருச்சி மாநில மாநாட்டுக்கு சாலை வழியாக செல்ல அக்கட்சி தலைவர் கருணாநிதி விரும்புகிறார்.
திமுகவின் 10வது மாநில மாநாடு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திமுக தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் கூட்டணி தலைவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

தொலை தூர நகர்களில் நடக்கும் கட்சி கூட்டங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாக ரயிலில் செல்வார். ஆனால் திருச்சி மாநாட்டுக்கு சாலை வழியாக செல்வேன் என்று தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்களோ உங்களின் உடல் நிலையை மனதில் வைத்தாவது ரயிலில் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
கருணாநிதியோ தான் சாலை வழியாகத் தான் செல்வேன் என்று மீண்டும் தெரிவித்ததால் குடும்பத்தினர் அவரது விருப்பத்தை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அவர் செல்லும் வழியை அவரது தனிபாதுகாவலர் பாண்டியன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு செய்தது.
கருணாநிதியுடன் சிறப்பு மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தார் சிலரும் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications