கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது: காவிரி மருத்துவமனை அறிக்கை
சென்னை: கருணாநிதி ரத்த அழுத்தம் தற்போது சீரடைந்துள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, ஜூலை 28ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு, காவிரி மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அவரது ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. அவர் நிபுணத்துவ டாக்டர்களால் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, நிருபர்களிடம் பேசிய ஆ.ராசா, திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. செயற்கை சுவாசம் எதுவும் பொருத்தப்படவில்லை. எனவே, தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
முன்னதாக கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ப்பட்டார்.












Click it and Unblock the Notifications