ஒற்றை விரலைக்காட்டி துரைமுருகன் என்னை மிரட்டி: சேலத்தில் கருணாநிதி கலகல
சேலம்: துரைமுருகன் என்னை தொலைத்துவிடுவேன் என்று மிரட்ட ஒற்றை விரலை காட்டவில்லை என்று சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.
சேலம் போஸ் மைதானத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
இரவு 8.50 மணிக்கு மேடைக்கு வந்த கருணாநிதி மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களும் நேரம் போனதே தெரியாமல் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மேடையில் கருணாநிதிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த துரைமுருகன் அவரிடம் பத்து மணி அடிக்க ஒரு நிமிடம் உள்ளது என்பதை தெரிவிக்க ஒற்றை விரலை காட்டினார். அதை பார்த்த கருணாநிதி துரைமுருகன் என்னை தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாக யாரும் நினைக்க வேண்டாம், நேரமானதை தான் அவர் அப்படி தெரிவித்தார் என்றார்.
இதை கேட்ட துரைமுருகன் மற்றும் கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.