'சொத்துக் குவிப்பு வழக்கு' போர்டு வைப்பதை தடுத்து நிறுத்தினேன்: கருணாநிதி

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதல்வர் ஜெயலலிதா, நான்கு திருமணங்களை ஒரே இடத்தில் நடத்தச் சொல்லி, அதில் பங்கேற்றிருக்கிறார். இதனால், போக்குவரத்து எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டது .
ஜெயலலிதா வரும் வழியில் திருமண வீட்டார் சார்பில், அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளாலும் சாலைகளில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது பற்றியும், என்னிடம் சிலர் முறையிட்டனர். முதல்வர் செல்லும் வழியில், அவரை பாராட்டி, பிளக்ஸ் போர்டுகள் வைப்பதைப் பற்றி, நமக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால், தேவையில்லாமல், நம்மிடம் வம்பு வளர்ப்பதைப் போல, 'கோபாலபுரம் கொழுத்தது' என்றல்லாம் போர்டு வைத்திருந்தனர். இதைப் பார்த்து விட்டு, சென்னை மாவட்ட தி.மு.க.,வினர், முதல்வர் வீட்டு வாசலில், 'சொத்துக் குவிப்பு வழக்கு' பற்றியெல்லாம் போர்டு வைக்க முற்பட்ட செய்தி எனக்கு கிடைத்ததும், அண்ணாதுரை கற்றுக் கொடுத்த அந்த அரசியல் நாகரிகத்தின்படி, நான் உடனடியாக அதை தடுத்து நிறுத்தினேன். இவ்வாறு, கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications