பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி - கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய அளவில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், அதுவரை 743 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 4,185 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 206 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 180 பேர், மத்தியப் பிரதேசத்தில் 99 பேர், தெலங்கானாவில் 46 பேர் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 225 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு தனியார் ஆய்வுக் கூடங்களில் ரூ. 3,750 கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் செய்தி வந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்ளலாம். இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும். ஆண்டுதோறும் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சலே வராது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியை இலவசமாக வழங்க தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடெங்கும் உள்ள சிபிஐ அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியைப் பின்பற்றுமாறு அதன் தலைமையக நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது உண்மையானால் மத்திய அரசும், பிரதமரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐயில் ஹிந்திக்கு முதலிடம் அளிக்கப்பட்டால் மத்திய அரசின் ஒவ்வொரு துறையும் இதைப் பின்பற்றும் நிலை ஏற்படும்.
-இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications