பறிமுதலாகும் கோடிக்கணக்கான பணத்துக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்: கருணாநிதி
சென்னை: கரூரில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் பல கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்களின் கொள்ளை பற்றி சில வாரங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியது. இந்நிலையில், வேட்பாளர்களுக்கு வழங்க பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறையை அதிமுக எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று மீண்டும் கொள்ளை அடிக்கலாம் என்பதுதான் அதிமுகவின் திட்டமா? கைப்பற்றப்பட்டது 100 கோடியா? இதெற்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும். அதைவிடுத்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டியதில்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications