கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதி செய்யப்படும்: ஆளுநர் ரோசய்யா
சென்னை: கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதி செய்யப்படும் என ஆளுநர் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்தார்.
தமிழகத்தின் 15வது சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. கூட்டத் தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் ரோசய்யா தனது உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார். மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்றார்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றார். கச்சத்தீவை மீட்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதி செய்யப்படும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா மருந்தகம், அம்மா பசுமை பண்ணைக்கடை, அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடரும் என்று கூறிய அவர், இலவச கால்நடை, ஆடுமாடு அளிக்கும் திட்டம் நீடிக்கும் என்று கூறினார்.
வரும் ஆண்டுகளில் 16 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய ஆளுநர் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடரும் என்றும் கூறினார். அனைத்து தரப்பினரும் சமூக பொருளாதார வளர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications