செங்கோட்டை காட்டுக்குள்... ரூ. 1.70 கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கும் விடுதிகள்

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: செங்கோட்டை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ.1.70 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தங்கும் விடுதிகளை கேரள அமைச்சர் திறந்து வைத்தார்.

கேரளமாநிலம் தென்மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை மேம்படுத்தி அங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் வண்ணம் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

Kerala government sets up tourist homes in Sengottai forest

அதன்படி, தென்மலையில் உள்ள கல்லடா நீர்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் படகு வசதி, வனப்பகுதியில் உள்ள செந்தூரனி ஆற்றின் குறுக்கே கயிறு பாலத்தில் நடப்பது, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவது, இசைக்கு வண்ண விளக்குகள் நாட்டியமாடுதல் என எராளமான வசதிகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 1.70 கோடி செலவில் செந்தூரணி வனப்பகுதியில் மட்டுமின்றி தென்மலையில் இருந்து ஆரியங்காவு ரோஸ் மலை வரை தனி வாகனத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனப்பகுதியில் விடுதிகள் கட்டப்பட்டன.

செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தினுள் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து வரும் நீரினால் இங்குள்ள நீர்நிலைகள் உருவாகியுள்ளது. இச்சரணாலயம் சூழ்நிலை சுற்றுலாவை மேம்படுத்தும் அனைத்து வளர்ச்சி வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. மேலும் தென்மலையை சுற்றி 50 கிமீ சுற்று புறங்களில் சூழ்நிலை சுற்றுலா மையங்கள் உருவாகியுள்ளது. சூழ்நிலை சுற்றுலா வழியாக தென்மலை பகுதியை மேம்படுத்துவது கேரள அரசின் முக்கியமான திட்டமாகும்.

மேலும் சூழ்நிலை சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆதிவாசிகலும், உள்ளூர்வாசிகளும் வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது இச்சூழ்நிலை சுற்றுலா மையங்களுக்கும், அதை சார்ந்த இடங்களுக்கும் தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிறது. சுற்றுசூழல் பதிவு, மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சிகள் இந்த பகுதியில் நடைபெறுகிறது. சுற்றுலா செயல்பாடுகளின் சுற்று சூழல் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த சுற்றுலா திட்டத்தின்படி இங்குள்ள வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று அம்மாநில அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைப் பெற்றது. இவ்விழாவில் புனலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜீ, ஊராட்சிமன்றதலைவர் ஜெகதாம்பாள், சைலஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+