ஜல்லிக்கட்டு அனுமதி ஓகே! ஆனால் இதுவும் முக்கியம்.. கொங்கு ஈஸ்வரன் அரசுக்கு வைக்கும் புது டிமாண்ட்!
சென்னை: ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் இதே நேரத்தில் அழிந்து வரும் நாட்டு மாடு மற்றும் காளை இனங்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்திட வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் புது கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மாடு மற்றும் காளை இனங்கள் அழிந்து வருவதால் அதை காக்க வேண்டிய தேவை இப்போது எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மெரினா புரட்சி தமிழர்களின் ஒற்றுமையை காட்டியது. பள்ளி, கல்லூரி என அனைத்து இடத்திலும் இதற்கான கூக்குரல் விண்ணை எட்டியது.
தமிழர்களின் கலாச்சாரத்தை காக்க இன்று உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கொடுத்த தீர்ப்பு மிகவும் வரவேற்புக்குரியது. நமது பழைய கலாச்சாரங்களை மீட்டெடுக்க இது உத்வேகமாய் அமையும்.
தற்போது பால் உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அந்நிய நாட்டு கலப்பின மாடுகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். இன்றைய நிலையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் பால் தேவைக்கு நாம் கலப்பின மாடுகளை சார்ந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அதே நேரத்தில் நாட்டு மாட்டு இனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இந்த சந்தோசமான நேரத்தில் அழியும் நிலையில் உள்ள சிறப்பு வாய்ந்த பல நாட்டு மாட்டு இனங்களை காத்திட வேண்டுமென்று தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும், விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் அழிந்து வரும் நாட்டு மாடு மற்றும் காளை இனங்களை காக்க ஒரு விரிவான கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications