காயத்திற்க்கு(உடலுக்கு) பலமூட்டும் கோவில்பட்டி கடலை மிட்டாய் ஆன்லைனில்... நாங்க புதுசுங்கோ...
கோவில்பட்டி என்ற உடன் தமிழகத்தில் பெரும்லானோருக்கு சட்டென்று நினைவில் வருவது கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய். கடலை மிட்டாய் என்பது தமிழகத்தில் பரவலாக அணைத்து மாவட்டங்களிலும் கிடைக்கக்கூடியது என்றாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அதன் சுவை இன்னும் அதிகம் என்பது நாம் அறிந்ததே.
இத்தகைய கடலை மிட்டாய் அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டு வருவதோடு அதிக எடை உள்ளவர்களின் எடை குறையும். இன்னும் பல நன்மைகள் உண்டு இதை உண்பதால். இத்தனை சுவை மிகுந்த கடலை மிட்டாய் எப்படி இங்கு மட்டும் கிடைக்கிறது என்று அறிய ஆவலா? ஆம் என்றால் மேலும் படியுங்கள்.
கோவில்பட்டியில் மார்க்கெட் ரோடு முழுவதும் கடலை மிட்டாய் விற்கும் கடைகள் அதிக அளவில் இருந்தாலும் அதில் குறிப்பாக MNR மற்றும் VVR என்கிற இரண்டு கடைகளில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாயில் தான் சுவை மிக அதிகமாக இருக்கும். இதன் சுவையின் ரகசியம் இந்த கோவில்பட்டி ஊரு மண் வாசனையும், கோவில்பட்டியில் பல வருட அனுபவத்துடன் கடலைமிட்டாய் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் கை பக்குவம் தான் கடலை மிட்டாயின் அதிக சுவைக்கு காரணம் என்றே பலர் நம்புகின்றனர். இது மட்டுமில்லாமல் இங்கு விளையும் கடலையும் மிக தரமானகவும் இருப்பதால் இந்த கடலை மிட்டாய் இயற்கையாகவே மிக அதிக ருசி பெறுகிறது.
கோவில்பட்டியில் இருந்து கடலை மிட்டாய் உலக அளவில் தினமும் விற்பனை மற்றும் ஏற்றுமதி நடக்கிறது.
இத்தகைய ருசியான கடலை மிட்டாய் எப்படி தயாரிப்பது என்று பார்போம்.
ருசியான கோவில்பட்டி கடலைமிட்டாய் தயாரிக்கும் முறை :
தேவையான பொருட்கள் :
வறுத்த நிலக்கடலை - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
முதலில் வெல்லத்தை அடுப்பில் வைத்து குறிப்பிட்ட வெப்பத்தில் பாகு வரும் வரை காய்ச்சு பின்பு சிறிது நேரம் பாகுவை ஆற வைக்க வேண்டும்.
பின்பு, குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு காய்ச்சிய வெல்லம் மீண்டும் இரண்டாவது முறையாக காய்ச்சவேண்டும். இந்த முறை பாகு நன்கு கொதிக்க விடவேண்டும்.
பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும். பின்னர் அதனை சட்டியில் இருந்து வெளியே எடுத்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மர அச்சில் கொட்டி பின்பு கனமான இரும்பு உருளை கொண்டு கடலைமிட்டாய் கலவையை சமப்படுத்துகின்றனர்.
நாம் வீட்டில் செய்தால் கடலை உருண்டை போல் உருண்டைகளாக பிடித்து கொள்ளலாம்.
பின்னர், கற்கண்டு மற்றும் ஏலக்காய் ஆகியவை தூளாக்கப்பட்டு, வெட்டப்பட்ட கடலைமிட்டாய் மீது தூவப்படுகிறது. இறுதியில் கடலை மிட்டாய் மீது தேங்காய் துருவலும் தூவப்படுகிறது.
இவ்வாறாக தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய் கால் கிலோ, அரைகிலோ, ஒரு கிலோ என எடையிடப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. மேலும், உதிரி கடலைமிட்டாய் எனவும் பல்வேறு வடிவங்களிலும் கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இத்தகைய சுவையான சத்தான கோவில்பட்டி கடலை மிட்டாய் தயார் செய்து உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறது நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) . உங்களுக்கு தேவையான அளவில் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் இல்லம் தேடி வரும் நேடிவ்கிருஷ்.காம் இன் சுவை மிகுந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்.
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான் Nativcrush.com.