பர்கூரில் பாதுகாப்பு கேட்டு போலீசிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி - வீடியோ
கிருஷ்ணகிரி: பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கிருஷ்ணகிரியில் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினிதா தேவி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த போது இரு வீட்டுப் பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, காதல் ஜோடி பதிவு திருமணம் செய்துகொண்டது.
பதிவுத் திருமணம் செய்துகொண்டதால் இருவரின் வீட்டிலும் இருந்து எதிர்ப்பு வரும், அதனால் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் இருவரும் காவல்துறையை நாடி பாதுகாப்புக் கோரி மனு அளித்தனர். அவர்களின் மனுவை விசாரித்த மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications