கூடங்குளத்தில் டிசம்பர் முதல்வாரத்தில் மின்உற்பத்தி துவக்கம் – இயக்குநர் அறிவிப்பு!
கூடங்குளம்: கூடங்குளம் முதலாவதுஅணு உலையில் டிசம்பர் முதல்வாரத்தில் மின்உற்பத்தி துவங்க இருப்பதாக கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணுஉலை தற்போது மின்உற்பத்தியை துவக்கி படிப்படியாக தமது உச்ச உற்பத்தி அளவான ஆயிரம் மெகாவாட்டை எட்டி சாதனை படைத்தது.

அதன் பின்னர் டர்பைன் பகுதியில் ஏற்பட்ட சில பழுதுகளால் மின்உற்பத்தி நிறுத்தி ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. கடந்த செப்டம்பரில் ஆய்வுப்பணிகள் துவங்கியது.
இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு முதல்அணு உலையின் மின்உற்பத்தி வரும் டிசம்பர் முதல்வாரத்தில் துவக்கப்பட வாய்ப்பிருப்பதாக அணுமின்நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார். இருப்பினும் வணிகரீதியிலான மின்உற்பத்தி குறித்த தேதி அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications