கோவை: வீட்டுக்குள் லாரி புகுந்து பெண் பலி: கணவர் படுகாயம்
கோவை: வீட்டுக்குள் லாரி புகுந்து பெண் பலி: கணவர் படுகாயம்
கோவையில் வீட்டுக்குள் லாரி புகுந்ததில் பெண் பலியானார். அவரது கணவர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவையில் வீட்டுக்குள் லாரி புகுந்ததில் விக்டோரியா என்பவர் பலியானார். அவரது கணவர் மரியதாஸ் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை சுங்கம் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ். அவரது மனைவி விக்டோரியா. இந்நிலையில் சுங்கம் பைபாஸ் சாலை வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது.
அது தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் மரியதாஸின் வீட்டுக்குள் புகுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி விக்டோரியா மீது லாரி ஏறியதில் அவர் பலியாகிவிட்டார்.
காயமடைந்த மரியதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications