தலைமுறையாய் வாழ்ந்த பூமி போச்சே.. நிலம் அளக்கப்பட்டதைப் பார்த்து மயங்கி விழுந்த பெண்!
8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம் அருகே சீரிக்காட்டில் நிலத்தை அளந்ததை பார்த்த பெண் மயக்கமடைந்தார்.
Recommended Video
சேலம்: 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த சேலம் அருகே சீரிக்காட்டில் நிலத்தை அளந்ததை பார்த்த பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்துவிட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.
விவசாயத்தை அழித்துவிட்டு பசுமை சாலை வேண்டாம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சீரிக்காட்டில் ஒரு குடும்பத்தின் வீடு, நிலம், கிணறு கையகப்படுத்தப்பட்டது.
ஒரு குடும்பத்தின் வீடும் விளைநிலமும் திடீரென கையகப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சி அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைமுறைகளாக வாழ்ந்த வீடும் நிலமும் பறிபோவதால் தனலட்சுமி என்ற விவசாயி மயக்கமடைந்தார்.
நிலத்தில் முட்டுக்கல் ஊன்றிய போது ஒட்டுமொத்த குடும்பமே கதறி அழுதது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.