கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்று.. வெளுத்து வாங்கிய மழை.. லட்சக்கணக்கான வாழைகள் சாய்ந்தன!
சூறை காற்றுடன் பெய்த மழையில் லட்சக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி: சூறைக்காற்றுடன் பெய்த மழையில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாழை மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையை தெடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பரவலாக பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு அங்கு திடீரென சூறை காற்றுடன் கன மழை வெளுத்து வாங்கியது. தக்கலை, வேர்கிளம்பி, சுருளோடு, திருவட்டார் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான வாழை மரங்கள் சூறை காற்றில் முறிந்து சேதமடைந்தன. மேலும் பல்லாயிரக் கணக்கான ரப்பர், தென்னை, ஆயினி போன்ற மரங்களும், அநேக மின்கம்பங்களும் முறிந்தன.
வாழைகள் சாய்ந்து விழுந்தது குறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ஒகி புயலின் போது முறிந்த வாழை மரங்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்காத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சூறை காற்றில் மாவட்டத்தில் லட்சக்கணக்கான வாழைகள் முறிந்துள்ளன.
உடனடியாக தமிழக அரசு முறையான நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பெருஞ்சாணி அணையில் 2 அடி தண்ணீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications