திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.75 மாணவர்கள் ஒன்று திரண்டு தமிழ் புத்தகம் வாசித்து உலக சாதனை
1.75 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழ் படித்து உலக சாதனை படைத்தனர்.
Recommended Video

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1.75 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் உலக சாதனை நிகழ்த்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,177 பள்ளிகள் உள்ளன. அதில் 2.75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

அவர்களில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகள் என 1.75 லட்சம் மாணவர்களின் கல்வித் திறனை சோதித்து, தமிழ் படித்தல் திறனை ஆய்வு செய்து உலக சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம், ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் 75,000 பேர் புத்தகம் வாசித்து படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது
திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில்தான் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்த இந்நிகழ்ச்சியில், மாவட்டமுழுவதும் 470 மையங்களில் மாணவர்கள் ஒன்று திரண்டு, ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
காலை 9.30 மணி முதல் 9.45 மணிவரை வாசிக்கும் நிகழ்ச்சியும், 9.45 மணி முதல் 9.50 மணிவரை எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த சாதனையை வீடியோவில் பதிவு செய்யப்பட்டதுடன், உலக சாதனையை பதிவு செய்யும் 7 அமைப்புகளும் இதனை நேரில் பார்வையிட்டனர்.
கடந்த 2003ம் ஆண்டு இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றதாம். ஆனால் திருவண்ணாமலையில் மாணவர்கள் இன்று நிகழ்த்திய சாதனை அதை முறியடிக்கும் வகையில் அமைந்துவிட்டது.
ஒவ்வொருவருக்கும் தங்களது தாய் மொழி வழி கல்விதான் சிறப்பையும் ஆற்றலையும் தரக்கூடியது, அத்துடன், தாய்மொழியில் படிப்பதால்தான் சிந்தனை திறனை, கற்பனை சக்தி அதிகரிக்க வழிஉண்டு என்பதால், தமிழ் வாசித்தல் நிகழ்வை அடிப்படையாக கொண்டு இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது,
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications