பூங்கோதைக்கு பரிசளிக்கப்பட்ட வேல்... ஆலங்குளத்தில் பரபரக்கும் இறுதிக்கட்ட பரப்புரை..!
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் 'வேல்' ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள சூழலில் ஸ்டார் தொகுதியான ஆலங்குளம் பரபரத்துக் காணப்படுகிறது. ஒரு புறம் பனங்காட்டுப்படை கட்சி வேட்பாளர் ஹரிநாடார் நடக்கும் நகைக்கடையாக வலம் வந்து தொகுதி மக்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.

மற்றொரு பக்கம் திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா, குக்கிராமம் விடாமல் பயணித்து தனது சாதனைகளையும், திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகளை வளைத்திருக்கிறார்.
குறிப்பாக எந்தெந்த ஊர்களுக்கு பூங்கோதை பிரச்சாரம் செய்யச் செல்கிறாரோ, அந்த ஊரின் தேவைகளை அறிந்து அது தொடர்பான வாக்குறுதிகளை அளிப்பது அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. மாநில அரசியல், தேசிய அரசியல் பற்றி பேசாமல் உள்ளூர் பிரச்சனைகளை மக்களுக்கு நினைவுப்படுத்தி திமுகவுக்கான வாக்குகளை பூங்கோதை தக்க வைத்துக் கொள்கிறார்.
பூங்கோதை ஆலடி அருணாவின் வெற்றிவாய்ப்பு கருத்துக்கணிப்புகளில் உறுதியாகிய நிலையில், அவரது குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு காரணம் பூங்கோதையின் பிரச்சார அனுகுமுறை தான்.
இதனிடையே அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனுக்கு எதிரிகள் திமுகவில் யாரும் இல்லை. அவரது கட்சியான அதிமுகவிலேயே சிலர் உள்ளடி வேலைகளை பார்ப்பதை அறிந்து அவர் நொந்துகொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications