பல்வீர் சிங் இருந்த போது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது.."ஆனாலும்.." அம்பை எம்எல்ஏ சொன்னது இதுதான்!
நெல்லை: பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. சட்டம் ஒழங்கை சரியாக பராமரித்தார் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்ததுதான் தவறு என்று அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்.
அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, காவல் அதிகாரி பல்வீர் சிங் கொடூரமாக சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பற்களை பிடுங்கியதாக
அதாவது, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உதவி கலெக்டர் முகம்மது சபீர் விசாரணை நடத்தி வருகிறார்.

அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் போலீசார் உள்பட 13 பேர் இதுவரை ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளனர். இதனிடையே, அம்பை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அம்பை எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததாக தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை சரியாக பராமரித்தார்
ஏ.எ.எஸ்.பியின் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் நபர்களை இசக்கி சுப்பையா இன்று சந்தித்தார். அதன்பிறகு எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்ததுதான் தவறு. சட்டம் ஒழங்கை சரியாக பராமரித்தார் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

சட்டத்தை கையில் எடுத்ததுதான்
அதே நேரத்தில் சட்டத்தை அவர் கையில் எடுத்ததைத்தான் தவறு என்று சொல்கிறேன். சட்டத்தை அவர் கையில் எடுத்து இருக்கக் கூடாது. பல் பிடுங்குவதற்கு எந்த சட்டத்திலும் இடம் கொடுக்கவில்லை. தங்க ஊசியை கொண்டு கண்ணில் குத்திக்க முடியுமா? அவர் செய்தது அனைத்தும் தவறு என்று நான் சொல்ல வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் தவறு செய்து இருப்பார்கள். அதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். நான் காந்தி, மகான் என்று சொல்லக்கூடாது. தப்பு செய்ததற்கு பிடித்து வந்தார். ஆனால், சட்டத்தை அவர் கையில் எடுத்ததுதான் தவறு என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications