ஆயுதப் படை போலீஸ்காரருக்கு ஹெல்மெட்டால் அடி.. சட்ட மாணவர் கைது
போலீஸை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: ஆயுதப்படை காவலரை ஹெல்மெட்டால் தாக்கிய தனியார் சட்டக்கல்லூரி மாணவரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஆயுதப்படை காவலர் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் முத்துக்குமார். அப்போது, சரவணன் என்ற தனியார் சட்டக்கல்லூரி மாணவரும் அவர் அருகிலேயே தனியாக பைக்கில் ஒட்டியே வந்துள்ளான்.

இதனால், இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் தகராறாக முற்றி, இறுதியில் போலீஸ்காரர் முத்துக்குமார், சரவணனை சரமாரியாக அடித்துவிட்டார்.
இதில் வலி பொறுக்க முடியாமல் போய்விடவும், சரவணன் தான் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் முத்துக்குமாரை படார் என்று ஓங்கி அடித்தார். இதில் போலீஸ் முத்துக்குமாரின் எலும்புகள் நொறுங்கின. தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்குமாரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், மாணவர் முத்துக்குமாரையும் தற்போது கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications