சிவாஜியின் 90வது பிறந்தநாளான அக்டோபர் 1ல் மணிமண்டபம் திறப்பு...முதல்வர் திறந்துவைக்கிறார்!
நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : சென்னை அடையாறில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று 2015-ம் ஆண்டு, ஆகஸ்ட் 26-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அடையாறில் சத்யா ஸ்டுடியோ எதிரில் மணிமண்டபம் கட்டும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் மே மாதம் இறுதியில் நிறைவடைந்தன. இந்நிலையில் இந்த மணிமண்டபம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை அவரது 90வது பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி சிவாஜி மணிமண்டபம் திறந்து வைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக சிவாஜி கணேசனின் குடும்பத்தார் மற்றும் திரைத்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜிகணேசனின் சிலை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications