இப்ப என்ன அவசரம்... உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் - வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளார்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா இணைந்து எதிர்க்கொண்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

 local body election alliance will be taken during the time

இதனையடுத்து, தேர்தல் தோல்வி தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தீவிர ஆலோசனை மேற்கொண்வருகிறார். இதனிடையே மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியே வருமாறு தேமுதிக நிர்வாகிகள் குரல் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேர்தலின் போது தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக, தமாகா தனித்து போட்டியிடுவதில் தவறு ஏது்ம் இல்லையே. இருப்பினும் தேமுதிக, த.மா.கா. வுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து நட்பு பாராட்டப்படும் என்று கூறினார். மேலும், உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கச்சத்தீவு விவகாரத்தில் 2 கட்சிகளின் விவாதங்களும் அவர்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+