வைகோவுடன் தொகுதி பங்கீடு குறித்து பாஜக பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து மதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்து இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.55 மணிக்கு பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மதிமுத தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வந்தார். தங்கள் அலுவலகத்திற்கு வந்த ராதாகிருஷ்ணனை வைகோ வரவேற்றார்.
பின்னார் வைகோ தலைமையிலான குழுவும், ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தின.












Click it and Unblock the Notifications