‘முதல் கையெழுத்து’ போடுவோம் என்ற நம்பிக்கையை அன்புமணி இழந்து விட்டார்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நமக்கு நாமே பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின். இதனால், பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தனது நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்ட பயணத்தை கடந்த நவம்பர் 20-இல் கன்னியாகுமரியில் தொடங்கி 11 மாவட்டங்கள் வழியாக திருச்சியில் அக்டோபர் 2-இல் நிறைவு செய்தார். இரண்டாம் கட்ட பயணத்தை அக்டோபர் 7-இல் நீலகிரியில் தொடங்கி 12-வது மாவட்டமாக ஞாயிற்றுக்கிழமை கடலூரில் நிறைவு செய்தார்.

“Lost all hope”, says Stalin about Anbumani Ramadoss

தனது நமக்கு நாமே பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தனது சுற்றுப் பயணத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருப்பதால் மற்ற அரசியல் கட்சிகள் கவலையடைந்துள்ளதாக' கூறியுள்ளார்.

மேலும், இந்தச் சுற்றுப்பயணத்திற்கு நமக்கு நாமே என்று திமுக தலைவர் கருணாநிதி தான் பெயர் வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, தனது இந்தச் சுற்றுப்பயணத்தால் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ், முதலமைச்சராகி முதல் கையெழுத்து போடுவோம் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஏற்கனவே, அன்புமணி ராமதாஸுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே அறிக்கைகள், பேட்டிகள் மூலம் ஊடகங்கள் வாயிலாக சொற்போர் நடந்தது நினைவு கூறத்தக்கது. இந்நிலையில், ஸ்டாலின் அன்புமணி ராமதாஸின் ‘முதலமைச்சர்' நம்பிக்கை தகர்ந்து விட்டதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+