கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன? திமுக தரப்பு அதிரடி வாதம்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க கோரிய வழக்கில், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் திமுக தரப்பு கடுமையான வாதங்களை முன் வைத்தது.
இன்று காலை 8 மணி முதல் நடைபெறும் வழக்கில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில்,

திராவிட தலைவர்களுக்கு மெரினாவில் இடம் கொடுப்பதுதான் வழக்கம். காந்திமண்டபம் அருகே கருணாநிதிக்கு கொடுப்பது சித்தாந்த அடிப்படையில் சரியாக இருக்காது. எனது வாழ்க்கையும், ஆன்மாவும் கருணாநிதி என அண்ணா கூறுவது வழக்கம். எனவே, காந்தி மண்டபம் அருகே கருணாநிதிக்கு இடம் தருவது 'டீசன்ட்' இறுதி சடங்காக இருக்காது. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சட்டப்பிரிவு 21ன்கீழ் 'டீசன்ட்' இறுதிசடங்குக்கான உரிமையுள்ளது.
ராஜாஜி, காமராஜரின் சித்தாந்தம் வேறு, கருணாநிதியின் சித்தாந்தம் வேறு. சித்தாந்த நிலையில் வேறுபாடு கொண்ட தலைவர்களை ஒரே நிலையில் ஒப்பிட கூடாது. பதவியில் உள்ளவர்களுக்கு மட்டுமே மெரீனாவில் அடக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை.
கடலோர ஆணைய விதிப்படி கட்டடம் கட்டத்தான் அனுமதி வேண்டும். அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய மாநகராட்சி விதியில் இடம் உண்டு.
ஜெயலலிதா இறந்தபோது கடலோரத்தில் அடக்கம் செய்ய தடையில்லை என அரசே கூறியுள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்துக்கு மத்திய அரசு அனுமதி தேவையில்லை. வழக்குகள் தான் சிக்கல் என அரசு கூறியது. ஆனால் வழக்கு தொடுத்தவர்களே வாபஸ் பெற்றுள்ளனர், ஆட்சேபனை இல்லை எனவும் கூறிவிட்டனர்.
அண்ணா சமாதியில் கருணாநிதிக்கு இடமில்லை என்பது மக்கள் மனதை புண்படுத்தும் செயல். 7 கோடி தமிழக மக்களில் 1 கோடி பேர் திமுகவினர். அவர்களை காயப்படுத்தும் செயல். அண்ணா நினைவிடப் பகுதி அடக்கம் செய்யும் இடமாக 1988ல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதில் கருணாநிதிக்கு இடம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு அவர் வாதிட்டார். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வீர கதிரவனும், வில்சன் கூறிய வாதத்தை விரிவுபடுத்தி வாதிட்டார்.
ஜெயலலிதா நினைவிட விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்று அப்போது அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications