எல்லாம் முடிந்து 'எஸ்கேப்' ஆகப் பார்த்த காதலன்... போலீஸில் மாட்டிவிட்ட காதலி

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் காதலியை கைப்பிடிக்க மறுத்த காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர் கோட்டை அருகே உள்ள பரிந்தல்காலனியை சேர்ந்தவர் குண்டுமணி. இவரது மகள் மகேஸ்வரி.

இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஏழுமலை மீது உளுந்தூர்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்புகாரில், "ஏழுமலை கடந்த 4 ஆண்டுகளாக என்னை காதலித்து வந்தார். வேலைக்காக வெளிநாடு சென்று திரும்பிய அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வீட்டில் தனியாக இருந்த என்னை ஏமாற்றிவிட்டார்.

பிறகு அவரிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் இன்ஸ் பெக்டர் மோகனசுந்தரி வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+