லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள்: ஜெ
காங்காயம்: நடைபெறவுள்ள நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த லோக்சபா தேர்தல் இந்திய நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கக் கூடிய தேர்தல் என ஜெயலலிதா கூறினார்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா காங்கேயத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது,கூறியதாவது:
''நடைபெறவுள்ள தேர்தல் இந்திய நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கக் கூடிய தேர்தல். அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால்தான் தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும்.
எனவே, மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் விதத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications