அழைப்பிற்கு மரியாதை.. ஜல்லிக்கட்டை காண அலங்காநல்லூர் செல்வேன்.. மு.க. ஸ்டாலின்
கிராம மக்கள் அழைப்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அலங்காநல்லூர் செல்வேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் முழு மூச்சாய் நின்று பெரும் போராட்டத்தை நடத்திய பின்னர் ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. அதில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டிற்கான சட்டத்தை இயற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியாமல் இருந்து ஜல்லிக்கட்டு தற்போது ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் வரும் 10ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அலங்காநல்லூர், பாலமேட்டு கிராம மக்கள் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என போராட்டம் நடத்தியதற்கும் ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூர் செல்வேன் என கூறினார்.












Click it and Unblock the Notifications