அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சொன்ன கோரிக்கை.. அப்படியே ஏற்ற அரசு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக முன்வைத்த கோரிக்கை அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது : உடனடியாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
உச்சநீதிமன்றம் கொடுத்த 6 வார கால கெடுவில் 1 வாரம் முடிந்த நிலையில் பிரதமரை உடனடியாக சென்று சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் போட வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறரும் இதனை வழிமொழிந்ததால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி நீர் விஷயத்தில் உள்ள சட்டச்சிக்கல்களை ஆய்வு செய்து சட்ட வல்லுநர்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம், அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications