இரட்டை இலை சின்னம் குறித்து கவலையில்லை- ஆ.கே.நகரில் திமுக வெல்லும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு மீண்டும் கிடைத்தது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை : இரட்டை இலை சின்னம் குறித்தெல்லாம் எங்களுக்கு கவலையில்லை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலோசனை கூட்டத்திற்கு அவர்களும் வருகை தந்தனர். ஆலோசனையில் முடிவில் மருதுகணேஷை வேட்பாளராக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனநாயக முறையில் ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இரட்டை இலை சின்னம் அதிமுகவினருக்கு மீண்டும் கிடைத்தது பற்றி எங்களுக்கு கவலையில்லை.
காங்கிரஸ் மட்டுமல்லாது பிற கட்சிகளிடமிருந்து ஆதரவு கேட்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications