ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி… சொன்னது மு.க. ஸ்டாலின்
சென்னை: நமக்கு நாமே பயணம் குறித்து வைக்கப்பட்ட பேனரை மறைத்து, ஜெயலலிதாவே என்னை வரவேற்பது போல் அ.தி.மு.க.வினர் வைத்த பேனருக்காக ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
'நமக்கு நாமே விடியல் மீட்பு' பயணத்தின் இரண்டாம் கட்ட பயணத்தை நீலகிரியில் தொடங்கிய தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

ஜெயங்கொண்டத்தில் பேசிய ஸ்டாலின், அம்மா ஓய்வு, ஸ்டாலின் ஆய்வு. என்ன கொடுமை பாருங்கள், ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். ஓய்வு எடுக்க வேண்டியவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
என்னுடைய 'நமக்கு நாமே' பயணத்திற்கு பேனர் வைத்தால், அதுக்கு பக்கத்துல அ.தி.மு.க.வினர் பத்து பேனர்களை வைக்கின்றனர். சுற்றி அம்மா பேனர்தான். அம்மா என்னை வரவேற்கிறாங்க, பாருங்க. எனவே, தோழர்களை அன்போடு கேட்டுக்கிறேன், இனி எனக்கு தி.மு.க.வினர் பேனர் வைக்க வேண்டாம். அ.தி.மு.க.வினரே பேனர் வைத்துவிடுவார்கள்.
முதல்வர் எவ்வளவு சிரித்த முகத்துடன் வரவேற்கிறாங்க பாருங்க. எதற்கு நமக்கு செலவு. இங்கு பேனர் வைத்துள்ள மாவட்டச் செயலாளர் முதல், கிளைச் செயலாளார் வரை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கு ஜெயலலிதாவுக்கு கோடான கோடி நன்றி தெரிவிக்கின்றேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications