நியூட்ரினோ திட்ட அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு... ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அராஜகமாக அனுமதி அளித்துள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அராஜகமாக அனுமதி அளித்துள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், தேனி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலத்தையும் பாழ்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து திமுக வலியுறுத்தி வருகிறது. நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அராஜகமாக அனுமதி அளித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்திற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறினோம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் எம்பிகள், எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்யலாம் என்று கூறினோம். ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது, தமிழக அரசும் மக்களை ஏமாற்றுகிறது. மேலாண்மை வாரியம் அமைக்காத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் கண்துடைப்பு நடவடிக்கையாக இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்கின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications